Monday, June 23, 2008

நன்றி........

எல்லாருக்கும் மறுபடியும் வணக்கம் ......
ஒரு பதிவையே பின்னூட்டமாக அனுப்பிய சசீவனுக்கு பிரத்தியேக நன்றி..

எனது பதிவைப்பற்றி மீண்டும் ஒரு விளக்கம்.. .. பதிவுக்கு பெயரை மட்டும்தான் "சே" இடமிருந்து எடுத்திருக்கிறன். அந்த கதாநாயகனை போல சமூகத்தை சீராக்குவது மிகவும் கடினம்தான்..

இந்தக்காலத்தில கதாநயகனாக வாழ்வது கடினமான விஷயம்(உண்மையாக.. வாழ முயல்வதே கடினம்தான் ) .. ஏனெண்டால் கதாநாயகனாக முயன்று நான் பட்ட தொல்லைகளை இந்தப்பதிவில பிறகு பதிகிறேன் ..
மீண்டும் சந்திப்போம்.... நன்றி.............

Thursday, June 19, 2008

நல்வரவு

இந்த பதிவுக்கு வந்த அனைவருக்கும் வணக்கம் .

எல்லாரும் இணையத்தில பதிவுகளை எழுதீனம் எண்டு நானும் ஒரு பதிவை பதிஞ்சு போடுவம் எண்டு இதை தொடங்கி இருக்கிறன் .. பாப்பம் என்னென்ன பின்னூட்டங்கள் வரப்போகுதோ தெரியேல்லை ...
என்னடா பதிவுக்கு புது மாதிரி பெயரா "பாதசாரியின் தினக்குறிப்பு" எண்டு வைச்சிருக்கிறான் எண்டு நீங்கள் ஜோசிக்கிறது விளங்குது . இந்த பெயருக்கு பின்னால ஒரு வரலாற்று சம்பவம் ஒண்டிருக்கு... அதென்னண்டால் என்னுடைய கதா நாயகர்களில் ஒருத்தர் தன்னுடைய பதிவை " உந்துறுளி தினக்குறிப்பு " எண்டு பதிஞ்சு போட்டு வீரமரணம் அடைஞ்சிட்டார் (உங்களுக்கு தெரியும் எண்டாலும் அவர் யாரெண்டு சொல்லுறன் .. அவர் வேறையாருமில்லை "சே" தான்..).. அப்ப என்ற பதிவுக்கும் அப்பிடி ஒரு பெயர் வைச்சா நானும் ஒரு வரலாற்று நாயகன் ஆகலாம் எண்டொரு பகல் கனவுதான் ....
இந்த பதிவில முழுக்க முழுக்க என்னை சார்ந்த விடயங்களும் பொது விடயங்களும் உள்ளடக்கபட்டிருக்கும் ... (ஒரு பாதுகாப்பு தான் பாருங்கோ .. இல்லாட்டி கனக்க பிரச்சினை வரும்...) ஒருத்தரும் கோவிக்க வேண்டாம் உங்கள பற்றி எழுதேல்லை எண்டு. விசயங்களை தாங்கோ எழுதுவம்..
இந்த பதிவுக்கு வரும் எல்லோரும் தயவு செய்து பின்னூட்டங்களை பதிஞ்சிட்டு போங்கோ ..
இல்லாட்டி அழுதுடுவன் ..